
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் சேர்த்தார். அதேபோல் இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சிறப்பாக விளையாடிய ஷிவம் துபே 40 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 60 ரன்களை விளாசினார். அதேபோல் ஜித்தேஷ் சர்மா 31 ரன்களும், ரிங்கு சிங் 16 ரன்களும் சேர்த்தனர்.
பவுலிங்கில் 2 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும், பேட்டிங்கில் 60 ரன்களையும் விளாசிய ஷிவம் துபே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே ரிங்கு சிங் தனது ஃபினிஷிங் குறித்து பேசுகையில், “பேட்டிங் வரிசையில் 6ஆவது இடத்தில் களமிறங்கி ஃபினிஷிங் செய்வது எனக்கு பழக்கமாக மாறிவிட்டது.