Advertisement

செய்தியாளர்கள் அறை கண்ணாடியை பதம் பார்த்த ரிங்கு சிங்கின் சிக்ஸர்; வைரல் காணொளி!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் அடித்த சிக்சர் ஒன்று செய்தியாளர்கள் அறையின் கண்ணாடியை தகர்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 13, 2023 • 00:04 AM
செய்தியாளர்கள் அறை கண்ணாடியை பதம் பார்த்த ரிங்கு சிங்கின் சிக்ஸர்; வைரல் காணொளி!
செய்தியாளர்கள் அறை கண்ணாடியை பதம் பார்த்த ரிங்கு சிங்கின் சிக்ஸர்; வைரல் காணொளி! (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதலாவது போட்டி டர்பனில் நேற்று முந்தினம் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டி டாஸ் போடப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான் இரண்டாவது டி20 போட்டி இன்று க்கெபர்ஹாவிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஷுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து டக் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். 

Trending


இதனால் 6/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவுக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் தம்முடைய பங்கிற்கு அதிரடி காட்டிய திலக் வர்மா 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த ரிங்கு சிங் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் தென்னாபிரிக்க பவுலர்களை தம்முடைய ஸ்டைலில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் புரட்டி எடுத்த சூரியகுமார் யாதவ் 3ஆவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதம் கடந்து 5 பவுண்டரி 3 சிக்சருடன் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஆனால் அப்போது வந்த ஜித்தேஷ் சர்மா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் நிதானமாக விளையாடிய ரிங்கு சிங் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்து இந்தியா 150 ரன்கள் தாண்ட உதவினர். குறிப்பாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்கம் வீசிய 19வது ஓவரின் 5வது பந்தில் இறங்கி வந்து முரட்டுத்தனமான சிக்சரை அடித்த அவர் கடைசி பந்தில் நேராக தெறிக்க விடும் சிக்சரை பறக்க விட்டார்.

 

அப்படி நேராக சென்ற 2ஆவது சிக்சர் மைதானத்தின் எதிர்புறத்தில் செய்தியாளர்கள் அமர்ந்து செய்திகளை சேகரிக்கக்கூடிய அறையின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகளை நொறுக்கியது. அந்தளவுக்கு அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 9 பவுண்டரி 1 சிக்ஸருடன் 68 ரன்களை எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்து இந்தியாவை காப்பாற்றினார்.

அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து களமிறங்கியுள்ள தென் ஆப்பிரிக்க அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement