
Rishabh Pant breaks 72-year-old record after sensational knocks in Birmingham Test (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோவின் அபாரமான சதத்தால்(106) முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது.
132 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் அரைசதம் கடந்திருந்த புஜாரா ஆட்டமிழக்க, அவருடன் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடிய ரிஷப் பந்தும் அரைசதம் அடித்தார். முதல் இன்னிங்ஸில் சதமடித்து 146 ரன்களை குவித்த ரிஷப் பண்ட் 2வது இன்னிங்ஸில் அரைசதம் கடந்து ஆடிவருகிறார்.