
Rishabh Pant Record: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பந்த், முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ரிஷப் பந்த், முன்னாள் இந்திய அணியின் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனியின் சிறந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பைப் பெறுற்றுள்ளார்.
அதன்படி 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் 233 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் இங்கிலாந்தில் அதிக ரன்களைச் சேர்த்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் எனும் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடிப்பார். முன்னதாக மகேந்திர சிங் தோனி இங்கிலாந்தில் இதுவரை 23 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி 778 ரன்களைக் குவித்துள்ளதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது.