Advertisement

கரோனா நிதியுதவி: களத்தில் இறங்கிய ரிஷப் பந்த், ரசிகர்கள் வாழ்த்து!

கரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்ற கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியிக் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 08, 2021 • 22:48 PM
Rishabh Pant Contributes Money For Oxygen Cylinders And Beds
Rishabh Pant Contributes Money For Oxygen Cylinders And Beds (Image Source: Google)
Advertisement


இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் கொரோனா நிதியுதவி வழங்குவது மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ரிஷப் பந்த் சமூக நல அமைப்பு ஒன்றுக்கு நிதியுதவி செய்துள்ளார்.

Trending


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரிஷப் பந்த், "விளையாட்டில் நான் கற்றுக்கொண்ட முக்கிய விஷயம், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான். அந்த வகையில் கரோனாவை எதிர்த்து ஓய்வின்றி உழைத்து வரும் முன் களப் பணியாளர்களுக்கு எனது சல்யூட். அதே போல கரோனாவில் இருந்து இந்தியா மீள நமது கூட்டு முயற்சி தான் தேவை.

அதற்காக நான் ஹெம்குண்ட் என்ற அமைப்புக்கு நிதி உதவிகள் செய்யவுள்ளேன். அந்த அமைப்பானது கிராமப்புறங்களில் ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து உதவி வருகிறது. எனவே அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முன் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கரோனா தாக்கத்தால் பலரும் தங்களக்கு நெருக்கமான உறவுகளை இழந்து வாடி வருகின்றனர். அதனை பார்க்கும் போது என் மனம் வலிக்கிறது. உயிரிழந்த அனைவரின் ஆத்மாவும் சாந்தி அடைய நான் பிரார்த்திக்கிறேன். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும்” எனத் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்தின் இம்முயற்சிக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement