ரிஷப் பந்த் எல்லொருக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளார் - ஆடம் கில்கிறிஸ்ட்!
தற்போதுள்ள விக்கெட் கீப்பர்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை ரிஷப் பந்த் செய்து காட்டியுள்ளார் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் புகழ்ந்து பேசியுள்ளார்.

ரிஷப் பந்த் எல்லொருக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளார் - ஆடம் கில்கிறிஸ்ட்! (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டாக எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வரும் அவர், தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து பேசிய அவர், “ரிஷப் பந்த் தற்போது உள்ள பல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். ஏனெனில் கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் பேட்டிங் செய்து வரும் விதம் நன்றாக இருக்கிறது. பொதுவாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் விளையாடுவது போன்று இல்லாமல் அதிரடியான இன்னிங்ஸை அவர் விளையாடி வருகிறார்.
எந்த வகையான கிரிக்கெட் போட்டிகளாக இருந்தாலும் சரி, அணி சிக்கலில் இருக்கும் போது அவருடைய தைரியமான அதிரடியான ஆட்டம் வெற்றிக்கு காரணமாகவும் இருந்து வருகிறது. அவரின் இந்த செயல்பாடு உலகில் உள்ள மற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு உத்வேகத்தை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது” என பாராட்டியுள்ளார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News