-mdl.jpg)
ஆசியக் கோப்பை 2022 சூப்பர் 4 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆசியக் கோப்பை லீக் சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து களமிறங்கியபோது தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் ஒரு ரன் எடுத்தபோது இந்தியா வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் சேர்க்கப்பட்டும் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை, இந்தியா வெற்றியைப் பெற்றது. அடுத்து சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக தினேஷ் கார்த்திக்கு மாற்றாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டார். ரிஷப் பந்த் அதிரடி பேட்டர் என்பதால், இவரை களமிறக்கியது தவறே இல்லை. மாறாக தீபக் ஹூடாவை டெத் பேட்டராக சேர்த்ததுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தீபக் ஹூடா பந்துவீசக் கூடியவர்தான். அந்த காரணத்திற்காகவும் ரோஹித் இவரை தேர்வு செய்யவில்லை. ஆம், கடந்த இரண்டு போட்டிகளிலும் இவர் ஒரு பந்தைகூட வீசவில்லை. டெத் ஓவர்களில் அதிரடி காட்ட தினேஷ் கார்த்திக்கு மாற்றாகத்தான் சேர்க்கப்பட்டார். இவர் வழக்கமாக மூன்றாவது இடத்தில் களமிறங்கி அதிரடி காட்டக் கூடியவராக இருக்கும் நிலையில், தேவையில்லாமல் தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு தீபக் ஹூடாவை டெத் பேட்டராக சேர்த்தது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.