
Rishabh Pant Tests Positive For Covid-19 Ahead Of England Tests (Image Source: Google)
விராட் கோலி தலைமயிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 23 வீரர்களுடன் இங்கிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடிய நிலையில், இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்குகிறது.
சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கும் இடையில் சுமார் 40 நாட்கள் இடைவெளி உள்ளது.
இந்நிலையில் இன்று காலை இந்திய அணியில் உள்ள இரண்டு வீரர்கள் கரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு மீண்டும் மேற்கொள்ள பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது