
சிஎஸ்கே அணியால் கடந்த ஆண்டு ஏலம் எடுக்கப்பட்ட ராபின் உத்தப்பா சென்னை அணிக்காக இதுவரை விளையாடவில்லை என்றாலும் அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார். இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் பவுல் அவுட் முறையில் பாகிஸ்தானை வீழ்த்திய சம்பவம் குறித்த நினைவுகளை அவரிடம் கேட்ட போது தனது நினைவலைகளை பகிர்ந்த ராபின் உத்தப்பா சில சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துகொண்டார்.
டர்பனில் நடைபெற்ற அந்த போட்டியில் இரு அணிகளும் 20 ஓவர்களின் முடிவில் 141 ரன்களை எடுக்க ஆட்டம் சாமானில் முடிந்து பவுல் அவுட் முறைக்கு சென்றது. இப்போது சூப்பர் ஓவர் இருப்பது போன்று அப்போது இருந்த அந்த பவுல் அவுட் முறையில் சேவாக் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் பந்துவீசி ஸ்டம்புகளைத் தகர்த்தனர்.
அதன் பிறகு மூன்றாவது ஆளாக யாருமே எதிர்பாராதவிதமாக முழுநேர பேட்ஸ்மேனான உத்தப்பா பந்து வீச வந்தார். மேலும் அவர் பந்து வீசி ஸ்டம்பையும் தகர்த்ததால் இந்திய அணி வெற்றியும் பெற்றது.