
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா 44 பந்தில் 64 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) தினேஷ் கார்த்திக் 19 பந்தில் 41 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 68 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் சிங், அஸ்வின், பிஸ்னோய் தலா 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், ஜடேஜா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 64 ரன்கள் எடுத்ததன் மூலம் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். அவர் 21 ரன் எடுத்து இருந்த போது சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.