Advertisement

ரோஹித் இந்தியாவின் நம்பர் ஒன் வீரர் - சேத்தன் சர்மா!

ரோஹித் சர்மாதான் இந்தியாவின் 'நம்பர் 1' கிரிக்கெட் வீரர் என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 19, 2022 • 19:29 PM
Rohit Sharma is the No.1 cricketer of our country: Chetan Sharma
Rohit Sharma is the No.1 cricketer of our country: Chetan Sharma (Image Source: Google)
Advertisement

இலங்கை தொடருக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று அறிவித்தது. டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். 

இதன்பிறகு, காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா, "ரோஹித் சர்மாவைப் பொறுத்தவரை அவர்தான் இந்தியாவின் 'நம்பர் 1' கிரிக்கெட் வீரர். அவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறார். 

Trending


ரோஹித்தை எப்படிக் கையாள்கிறோம் என்பது முக்கியம். ரோஹித்திடம் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டை வழிநடத்துவதற்கு ரோஹித் எங்களது தெளிவான தேர்வு. அவரை கேப்டனாக அறிவிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே.

இதுபோன்ற மிகப் பெரிய கிரிக்கெட் வீரர் அணியை வழிநடத்தும்போது, மேற்கொண்டு கேப்டன்களை உருவாக்கவும் ஒரு தேர்வுக் குழுவாக நாங்கள் விரும்புகிறோம். ரோஹித் தலைமையின் கீழ் அவர்களை உருவாக்குவது மிகச் சிறந்தது.

ரோஹித் நீண்ட நாள்களுக்கு அணியை வழிநடத்தினால், அது அணிக்கு நல்லது. எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது. அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளவரை அவரே டெஸ்ட் கேப்டன். அவருக்கு ஓய்வு தேவைப்படும்போது ஓய்வு வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement