-lg1-mdl.jpg)
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இவ்விரு அணிகளும் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு தற்போது வெற்றிபெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். அதன்படி இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா மேற்கொண்டு 86 ரன்களை எடுத்தால், ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் எனும் சாதனையை படைக்கவுள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவானை 221 இன்னிங்ஸ்களில் 6769 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.