
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் இரண்டாம் இடத்தில் தொடரும் நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளர். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென், இந்திய அணியின் விராட் கோலி ஆகியோர் தலா ஒரு பின் தங்கியுள்ளனர்.
அவர்களைத் தொடர்ந்து நீயூசிலாந்தின் டேரில் மிட்செல் 6ஆம் இடத்திற்கு முன்னேறிய நிலையில், அயர்லாந்தின் ஹேரி டெக்டர் 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து எட்டாவது இடத்தில் நீடிக்கும் நிலையில், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா 14 இடங்கள் முன்னேறி 14ஆம் இடத்தை பிடித்துள்ளார். இதன் காரணமாக கேஎல் ராகுல் ஒரு இடம் பின் தங்கி 15ஆம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.