
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முதல் அமீரகத்தில் தொடங்கியது. மிகவும் முக்கியமான போட்டியான இந்தியா - பாகிஸ்தான் மோதல் இன்று மாலை துபாயில் நடைபெறவுள்ளது.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது. எனவே இந்த முறை பதிலடி கொடுப்பதற்காக இந்திய ப்ளேயிங் 11 எப்படி இருக்கும், இந்தியா எப்படி தயாராகியுள்ளது என்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா நேற்று பேசினார். அப்போது பாகிஸ்தான் செய்தியாளருக்கு அவர் கொடுத்த பதில் தான் இணையத்தை கலக்கி வருகிறது.
பாகிஸ்தான் செய்தியாளர், "கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் மோதிய போது இந்திய அணியின் நிலைமை என்ன ஆனது என்பது உங்களுக்கு தெரியுமே, அந்த தோல்வியின் தாக்கம் இன்னும் அணிக்குள் இருக்கிறதா, மீண்டு வருவீர்களா” என்பது போன்று கேள்வி எழுப்பினார்.