Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2022: மீண்டும் ஆர்சிபியில் விளையாடவேண்டும் - சஹால்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் மீண்டும் இடம்பெற வேண்டும் எனப் பிரபல வீரர் சஹால் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 04, 2022 • 13:38 PM
"Run Towards Virat, And Say Whatever You Want": Yuzvendra Chahal (Image Source: Google)
Advertisement

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹார். தற்போது 31 வயதாகும் சஹால், இந்திய அணிக்காக 2016 முதல் 59 ஒருநாள், 50 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2014 முதல் ஆர்சிபி அணியில் விளையாடியுள்ளார். ஆர்சிபி அணிக்காக 113 ஆட்டங்களில் விளையாடி 138 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு சஹால் அளித்த பேட்டியில், “ஐபிஎல் ஏலத்தில் எனக்கு ரூ. 15 கோடி கிடைக்க வேண்டும் எனக் கூறமாட்டேன். ரூ. 8 கோடியே எனக்குப் போதுமானது. 

Trending


விராட் கோலி எனக்கு மூத்தவர். ஆர்சிபியில் நான் இருந்த 8 வருடங்களும் எங்களிடையே அருமையான சகோதரப் பாசம் நிலவியது. மைதானத்தில் மட்டுமல்ல அதன் வெளியேயும் அவரிடம் என்னால் என்ன வேண்டுமானாலும் கேட்க முடியும். அந்த நட்பினால் அவருடைய தலைமையின் கீழ் என்னால் சிறப்பாகப் பந்து வீச முடிந்தது.

ஆர்சிபி அணியில் விளையாடிய கடந்த 8 வருடங்களும் மறக்க முடியாதவை. இந்தமுறை என்னை எந்த அணி வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். ஒரு தொழில்முறை வீரராக எந்த அணியிலும் விளையாட நான் தயாராக இருக்க வேண்டும். 

ஆர்சிபி அணிக்கு மீண்டும் செல்ல விருப்பப்படுகிறேன். ஆனால் வேறொரு அணி என்னைத் தேர்வு செய்தால் அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். ஆர்சிபி அணியில் நன்கு விளையாடியதால் தான் இந்திய அணிக்கு நான் தேர்வானேன். என் திறமையை நிரூபிக்க அந்த அணி எனக்கு உதவியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement