
Ruturaj Gaikwad Opens Up About That Day When Ms Dhoni Took Retirement From International Cricket (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த பினிஷருமானவர் மகேந்திர சிங் தோனி. இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.
அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது மேலும் அதிர்ச்சி யூட்டினார். அதன்பின் தற்போது தோனி மற்றும் ரெய்னா இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து அவரிடம் கேட்பதற்கு எந்த வீரருக்கும் தைரியம் இல்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.