
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் தொடங்குகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எளிதில் வெற்றி கிட்டிவிடாது என்றும், வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ டிவி-க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "நாம் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலுமே வென்றாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்போது வந்துவிட்டது. எந்த வடிவ கிரிக்கெட்டாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் வெளிநாடுகளில் இந்திய அணி களமிறங்கும்போது, சிறப்பாக விளையாடி வென்றிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.