
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து, 1-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று டர்பனில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் பந்திலிருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெம்பா பவுமா பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ளி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
அதன்பின் 17 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 37 ரன்களை குவித்த டெம்பா பவுமா, சீன் அபேட் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டூசெனும் 6 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அதன் களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ரீஸா ஹென்றிக்ஸ் 3, டெவால்ட் ப்ரீவிஸ் ரன்கள் ஏதுமின்றியும் அதடுத்தடுத்து நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.