Advertisement

இப்படியிருந்தால், ஆட்டம் கைவிடப்பட வேண்டிய நிலைதான் வரும் - சுனில் கவாஸ்கர் காட்டம்!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 11, 2023 • 12:44 PM
இப்படியிருந்தால், ஆட்டம் கைவிடப்பட வேண்டிய நிலைதான் வரும் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
இப்படியிருந்தால், ஆட்டம் கைவிடப்பட வேண்டிய நிலைதான் வரும் - சுனில் கவாஸ்கர் காட்டம்! (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் டி20 தொடர் தொடங்கியுள்ளது. டர்பன் மைதானத்தில் நேற்று நடக்கவிருந்த முதல் டி20 போட்டி டாஸ் கூட போடப்படாமல் கனமழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக கைவிடப்பட்டது. இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்திருந்தன.

இதனால் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் பலரும் நீண்ட நேரம் மழை நிற்கும் என்று காத்திருந்தனர். ஆனால் கடைசி வரை மழை தொடர்ந்ததால், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியே மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், அடுத்தடுத்து நடக்கும் போட்டிகளும் பாதிக்கப்படுமோ என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Trending


இதனிடையே தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். நேற்றைய போட்டியின் போது சுனில் கவாஸ்கர் பேசுகையில், “தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மைதானம் மழை பெய்த போது வெறும் பிட்ச் மற்றும் 30 யார்ட் வளையம் மட்டுமே தார்பாய் மூலமாக மூடப்பட்டிருந்தது. இப்படியிருந்தால், ஆட்டம் கைவிடப்பட வேண்டிய நிலைதான் வரும். 

ஒவ்வொரு கிரிக்கெட் சங்கங்களும் அதிக வருவாய் ஈட்டுகிறார்கள். அதனால் மழை பெய்தால் மைதானத்தை முழுமையாக மூடுவதற்கான பணிகளை செய்ய வேண்டும். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது மைதானத்தை முழுமையாக மூடாததன் காரணமாக, ஏராளமான போட்டிகள் ரத்து செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் பல்வேறு அணிகளும் புள்ளிகளை இழக்க நேரிட்டது. அதில் தென் ஆப்பிரிக்காவும் ஒரு அணி தான். 

இந்தியாவில் உள்ள கொல்கத்தா மைதானத்தில் மழை பெய்தால், ஒட்டுமொத்த மைதானமும் தார்பாய் மூலம் மூடப்படும். அது சவுரவ் கங்குலி எடுத்த நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட விளைவு. ஒருமுறை மழை காரணமாக டெஸ்ட் போட்டியில் பிரச்சனையை சந்திக்க நேரிட்ட போது, கங்குலி உடனடியாக இதனை செயல்படுத்தினார். அதன்பின் தவறுகள் ஒருமுறை கூட நடக்கவில்லைவடிக்கை. ஆசிய கோப்பையின் போது இலங்கை கிரிக்கெட் வாரியமும் அப்படிதான் சிறப்பாக செயல்பட்டன” என்று விமர்சித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement