
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்தலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2ஆவது போட்டியில் வென்ற தென் ஆப்பிரிக்கா தொடரை சமன் செய்ததால் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3ஆவது போட்டி இன்று பார்ல் நகரில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர்களில் போராடி 296/8 ரன்கள் சேர்த்து அசத்தியது. இந்திய அணிக்கு அறிமுக வீரராக களமிறங்கிய ரஜத் படிதார் 22, சாய் சுதர்சன் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்ததாக வந்த கேப்டன் கேஎல் ராகுலும் 21 ரன்களில் நடையை கட்டினார்.
இந்த சூழ்நிலையில் மறுபுறம் களமிறங்கி இருந்த சஞ்சு சாம்சன் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அடுத்ததாக வந்த இளம் திலக் வர்மாவும் நிதான ஆட்டத்டதை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் திலக் வர்மா 5 பவுண்டரி 1 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார்.