Advertisement

SA vs IND, 3rd T20I: மூன்றாவது போட்டியிலிருந்து விலகிய வேகப்பந்துவீச்சாளர்கள்; பின்னடைவில் தென் ஆப்பிரிக்கா!

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் விலகியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 14, 2023 • 12:04 PM
SA vs IND, 3rd T20I: மூன்றாவது போட்டியிலிருந்து விலகிய வேகப்பந்துவீச்சாளர்கள்; பின்னடைவில் தென் ஆப்ப
SA vs IND, 3rd T20I: மூன்றாவது போட்டியிலிருந்து விலகிய வேகப்பந்துவீச்சாளர்கள்; பின்னடைவில் தென் ஆப்ப (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது முதல் கட்டமாக அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி கடந்த டிசம்பர் 10ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற இருந்த நிலையில் அந்த போட்டி மழையால் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நடைபெற உள்ளது.

Trending


இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்க காத்திருக்கிறது. அதே வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணியும் களம் காண்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி சார்பாக இரண்டு முக்கிய வீரர்கள் வெளியேறியுள்ள தகவல் வெளியாகி இந்திய அணிக்கு கூடுதல் சாதகத்தை வழங்கி உள்ளது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த வேகப்பந்து வீச்சாளர்களான ஜெரால்டு கோட்ஸி மற்றும் மார்கோ ஜான்சென் ஆகிய இருவரும் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஏனெனில் இந்தியாவிற்கு எதிராக எதிர்வரும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கும் அவர்கள் இருவரும் அந்த தொடருக்கு தயாராக போதிய அவகாசம் தேவை என்பதால் இந்த கடைசி டி20 போட்டியிலிருந்தது வெளியேறி உள்ளார்கள் என்றும் அவர்களுக்கு பதிலாக இன்றைய போட்டியில் இரண்டு புதுமுக வீரர்கள் அறிமுகமாக இருக்கின்றனர் என்றும் தென் ஆப்பிரிக்க அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி முக்கிய 2 வீரர்கள் விலகியுள்ளது இந்திய அணிக்கு கூடுதல் சாதகத்தை தரவும் வாய்ப்பு உள்ளது. அதேவேளையில் இந்திய அணியிலும் இரண்டு மாற்றங்கள் இருக்கலாம் என்றும் அதன்படி ஷுப்மன் கில் வெளியேற்றப்பட்டு ருதுராஜ் கெய்க்வாடும், குல்தீப் யாதவ் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ரவி பிஷ்னாயும் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement