
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆடாததால், கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 117 ரன்களை சேர்த்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில் மயன்க் அகர்வால் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். புஜாரா டக் அவுட்டானார். கோலி 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய கேஎல் ராகுல் சதமடித்தார். இது கேஎல் ராகுலின் 7ஆவது டெஸ்ட் சதம். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் அடித்துள்ளது. ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.