
ஐடன் மார்க்கம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது டிசம்பர் 10-ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற இருந்த வேளையில் மழை காரணமாக அந்த போட்டி டாஸ் கூட போடப்படாமல் முடிவுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 180 ரன்களை எடுத்திருந்த வேளையில் மழை பெய்தது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதை துரத்தி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது 13.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம், “இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் எவ்வளவு பந்துகளை பிடித்து விளையாடுகிறாரோ அதே அளவுக்கு அதிரடியாக ரன்களை குவிக்க முடியும்.