Advertisement
Advertisement
Advertisement

விராட் கோலிக்கு என்ன ஆனது? ராகுல் விளக்கம்!

காயம் காரணமாகவே விராட் கோலி இரண்டாவது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார் என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

Advertisement
SA vs IND: Virat Kohli Sits Out Due To Injury
SA vs IND: Virat Kohli Sits Out Due To Injury (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 03, 2022 • 02:51 PM

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் டாஸ் போட மைதானத்திற்கு வந்தது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 03, 2022 • 02:51 PM

ஏனெனில் கேப்டன் விராட் கோலி களத்திற்கு வராமல் ராகுல் களத்திற்கு வந்ததால் என்ன ஆனது? என்று தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு டாசிற்கு பிறகுதான் விராட் கோலி அணியில் இல்லை என்பது புரிந்தது.

Trending

மேலும் இந்திய அணியின் கேப்டனாக இந்த போட்டியில் ராகுல் முதன்முறையாக களமிறங்கினார். டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என்றும் அறிவித்தார். அதன்படி டாஸுக்கு பிறகு இந்திய அணியில் உள்ள மாற்றம் குறித்தும், விராட்கோலி ஏன் விளையாடவில்லை என்பது குறித்தும் ராகுல் தனது தெளிவான விளக்கத்தை அளித்திருந்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோலி எதிர்பாராவிதமாக முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக இந்த போட்டியில் விளையாட முடியாமல் போனது. பிசியோதெரபிஸ்ட் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். நிச்சயம் அவர் அடுத்த போட்டிகள் தயாராகிவிடுவார். 

ஒவ்வொரு இந்திய வீரரும் இந்திய அணிக்காக கேப்டன்சி செய்ய வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த வகையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்.

இந்த சவாலை எதிர்கொண்டு நான் விளையாட தயாராக இருக்கிறேன். இந்த மைதானத்தில் ஏற்கனவே இந்திய அணி சில வெற்றிகளை பெற்று உள்ளதால் நிச்சயம் அதை தொடர விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement