
தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒத்திவைக்கப்பட்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ஜொஹனன்ஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய குயின்டன் டி காக் 8 ரன்களிலும், டெம்பா பவுமா 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதனைத்தொடர்ந்து வந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் 25 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் கிளாசெனும் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டேவிட் மில்லர் களமிறங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.