
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலினேட்டர் சுற்று ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க்கில் நடபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - ஜேசன் ராய் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஜோஸ் பட்லர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 10 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் வானும் சாம் குக் பந்துவீச்சில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
இதனைத்தொடர்ந்து 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன்களை எடுத்திருந்த ஜேசன் ராயையும், வியான் லுபேவையும் நந்த்ரே பர்கர் தனது இரண்டாவது ஓவரில் வழியனுப்பிவைத்தார். இதனால் பார்ல் ராயல்ஸ் அணி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த டேன் விலாஸ் - கேப்டன் டேவிட் மில்லர் இணை ஓரளவு தாக்குப்பிடித்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.