
தென் ஆப்பிரிக்காவின் ஃபிரான்சைஸ் டி20 லீக் தொடரான எஸ்ஏ20 தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், கீரென் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெற்றறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்த்து மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ரஸ்ஸி வெண்டர் டுசென் - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியின் முதலிரண்டு ஓவர்களில் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை சோர்வடைய செய்தனர்.
ஆனால் அதன்பின் அதிரடியையைக் காட்டத்தொடங்கிய இருவரும் போட்டிப்போட்டு சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசித் தள்ளினர். இதில் ரஸ்ஸி வெண்டர் டுசென் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் இருந்த ரியான் ரிக்கெல்டனும் 27 பந்துகளில் அரைசதத்தைக் கடந்து அசத்தினார். தொடர்ந்து இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த ஜோபர்க் அணி பந்துவீச்சாளர் செய்வதறியாமல் திகைத்துப் போயினர்.