
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பிரிட்டோரியா கேப்பிட்டள்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 3 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. இதையடுத்து 4ஆவது இடத்திற்கான போட்டியில் நேற்று பார்ல் ராயல்ஸ் அணி, பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.
ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி நம்பர் 1 இடத்தில் உள்ள நிலையில், அந்த அணி நேரடியாகவே அரையிறுதிக்கு சென்று விட்டது. ஆனால், 4ஆவது இடத்தில் உள்ள பார்ல் ராயல்ஸ் அணி இப்போட்டியில் வெற்றி அல்லது 60 க்கும் குறைவான ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற சூழலில் களமிறங்கியது. இதில், டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி வெற்றி கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில், வெற்றியை மனதில் வைத்து அபாரமாக பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸ் மற்றும் ஃபிலிப் சால்ட் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவரில் 69 ரன்களை சேர்த்தனர். ஃபிலிப் சால்ட் 21 பந்தில் 39 ரன்கள் விளாசினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த குசால் மெண்டிஸ், காட்டடி அடித்து 41 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்தார்.