
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 50ஆவது பிறந்த நாள் இரண்டு நாட்கள் முன்பே கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டம் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் நடுவே நடைபெற்றது. இந்த போட்டி மும்பையின் ஹோம் கிரவுண்ட்-ஆன வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இன்றைய மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் டக் அவுட்-இல் சச்சின் டெண்டுல்கர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். 50 வயதை கடக்க இருக்கும் சச்சின் டெண்டுல்கர், இது எனது மிகவும் குறைவான அரைசதம் என்று தெரிவித்தார்.
சச்சின் டெண்டுல்கர் கடந்த 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் இந்த கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக மைதானத்தில் கூடியிருந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிக ரசிகர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் முகம் அடங்கிய முகக்கவசம் வழங்கப்பட்டு இருந்தது.