
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோதி வருகின்றன. இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீசுவதாக் தீர்மானித்து. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு சகா 54 ரன்கள் மற்றும் கில் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் 3ஆவது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் முதலில் நிதானமாக விளையாடி 33 பந்துகளில் அரைசதம் அடித்தபின் தனது கியரை மாற்றி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தீக்சனா, துஷார் தேஷ்பாண்டே மற்றும் பதிரனா ஆகியோரின் ஓவர்களில் நிறுத்தாமல் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி அடுத்த 14 பந்துகளில் 46 ரன்கள் அடிக்க, 47 பந்துகளில் 96 ரன்கள் அடித்து போட்டியின் கடைசி ஓவரில் அவுட்டானார்.
இதன் மூலம் 4 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இவரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களைச் சேர்த்தது. இருப்பினும் 96 ரன்கள் அடித்ததன் மூலம் சாய் சுதர்சன் பல்வேறு சாதனைகள் பட்டியலில் இடம்பிடித்தார்.