
டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் இறுதியில் தொடங்கவுள்ளது. இதற்கான அணிகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் கொடுத்தாக வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டிருந்த நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.
ஆசியக் கோப்பையில் இடம்பெற்றிருந்த அதே பேட்டிங் வரிசைதான் டி20 உலகக் கோப்பையிலும் தேர்வு செய்துள்ளனர். இந்த அணியில் சஞ்சு சாம்சனுக்கு நிச்சயம் இடம் இருக்கும் என்றுதான் பலர் நினைத்தார்கள். காரணம், சாம்சன் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ள கூடியவர். ஆஸ்திரேலியாவில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருக்கும் என்பதால், இவருக்கு நிச்சயம் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கும் எனக் கருதப்பட்டது.
ஆனால், எதிர்பார்த்தபடி சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவரின் இடத்தில் தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளார். குறைந்தபட்சம் ரிசர்வ் வீரர் பட்டியலில் கூட சாம்சன் பெயர் இடம்பெறவில்லை. எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறி வரும் ஸ்ரேயஸ் ஐயருக்கு கூட ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.