Advertisement
Advertisement
Advertisement

இனியும் இவருக்கு வாய்ப்பு கிடைத்த்தால் அதிர்ஷ்டம் தான் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

ரஹானேவுக்கு அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது அவருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement
Sanjay Manjrekar Makes Big Comment on Ajinkya Rahane’s Poor Form
Sanjay Manjrekar Makes Big Comment on Ajinkya Rahane’s Poor Form (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 08, 2021 • 12:34 PM

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 08, 2021 • 12:34 PM

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 10ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் இந்திய அணியின் பேட்டிங்கில் மிடில் ஆர்டர் சற்று பலவீனமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக அணியின் மூத்த வீரரான துணை கேப்டன் ரஹானே மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

Trending

இந்நிலையில் ரஹானேவுக்கு அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது அவருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “இந்திய அணியில் பல இளம் வீரர்கள் தங்களது வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ஹனுமா விஹாரி, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் தற்போது விளையாட தயாராக இருக்கும் வேளையில் ரஹானேவை தொடர்ந்து அணியில் வைத்திருப்பது கடினம். ஒருவேளை அவர் மீண்டும் 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினால் அவரை விட அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இல்லை என்றே கூறலாம்.

Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!

தற்போது ரஹானேவிற்கு சிறிது ஓய்வு தேவை. அவரின் இடத்திற்கு தற்போது நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். எனவே ரகானேவிற்கு ஓய்வு அளித்து 5ஆவது போட்டியில் புதிய வீரர்களை முயற்சி செய்து பார்க்கலாம்” என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement