
இலங்கை மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரை இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கி இலங்கை மகளிர் அணியில் விஷ்மி குனரத்னே 7 ரன்களுக்கும், ஹசினி பெரேரா 15 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் சமாரி அத்தபத்து - ஹன்சிமா கருணரத்னே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த நிலையில் 51 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஹன்சிமா 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கவிஷா தில்ஹாரி 42 ரன்களையும், நிலக்ஷி டி சில்வா 36 ரன்களயும் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழக்க, இலங்கை மகளிர் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தரப்பில் அயபொங்கா காகா, நதின் டி கிளார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் லாரா குட்டால் 7 ரன்களுக்கும், டெல்மி டக்கர் 2 ரன்களுக்கும், சுனே லூஸ் 21 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினர்.