Advertisement
Advertisement
Advertisement

ஷிகர் தவானின் கேப்டன்சியை கடுமையாக சாடிய விரேந்திர சேவாக்!

டெல்லி அணியிடம் பஞ்சாப் கிங்ஸ் தோல்வி அடைந்தது, அவர்கள் எடுத்த தவறான முடிவில் தான் என்று கடுமையாக தவான் கேப்டன்ஷிப்பை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் சாடியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 18, 2023 • 20:32 PM
Sehwag's bombastic remark on PBKS player Atharva Taide's knock vs DC!
Sehwag's bombastic remark on PBKS player Atharva Taide's knock vs DC! (Image Source: Google)
Advertisement

நேற்று பிளே ஆப் வாய்ப்புக்கான முக்கிய போட்டியில் ஐபிஎல் தொடரில் பஞ்சாப், டெல்லியை எதிர்த்து தர்மசாலாவில் விளையாடிய போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இதில் டாஸை இழந்து முதலில் விளையாடிய டெல்லி அணிக்கு கேப்டன் வார்னர், ப்ரீத்திவி ஷா, ரைலி ரூசோ ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வழங்க 20 ஓவர்களில் 213 ரன்கள் கிடைத்தது.

தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு லிவிங்ஸ்டன் அதிரடியான ஆட்டத்தை ஒரு முனையில் வெளிப்படுத்தினார். இன்னொரு முனையில் இளம் வீரர் அதர்வா டைடே அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார். சிறப்பாக ஒத்துழைப்பு தந்து விளையாடிவந்த அதர்வா டைடே 42 பந்தில் 55 ரன்கள் எடுத்திருந்த பொழுது 16ஆவது ஓவருக்கு முன்பாக அவர் ரிட்டையர்டு அவுட் முறையில் உள்ளே அழைக்கப்பட்டார். 

Trending


அவருக்கு பதிலாக ஜித்தேஷ் சர்மா களத்திற்கு வந்தார். ஆனால் அவர் ஒரு ரன்னக்கூட அடிக்காமல் டக் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். இதன் காரணமாக பஞ்சாப் அணி இறுதிவரை போராடியும் வெற்றியை ஈட்டவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணி நடுவில் எடுத்த இந்த தவறான முடிவால் அவர்கள் தோல்வியை தழுவி விட்டார்கள் என்று தவான் கேப்டன்ஷிப்பை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “பஞ்சாப் கிங்ஸ் அணி தவறான நேரத்தில் தவறான கணக்கீடு செய்து விட்டது. பேட்ஸ்மேன் சரியாக பந்துகளை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் ஈகோ இல்லாமல் முன்னரே வெளியேறி இருக்க வேண்டும். மற்ற வீரர்கள் வந்து குறைந்த பந்துகளில் அடிக்க பார்த்திருப்பார்கள். இருப்பினும் கடைசி ஐந்து ஓவர்களில் நிறைய ரன்கள் அடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது ஆகையால் வீரர்கள் வந்த வேகத்தில் தவறான ஷாட்டுகள் விளையாடி ஆட்டம் இழந்துவிட்டார்கள். 

இந்த இடத்தில் தான் பஞ்சாப் அணி தவறு செய்துவிட்டது. பேட்ஸ்மேன் அணியின் நல்லதற்காக முன்னரே இந்த முடிவை எடுத்திருக்கலாம். குறைந்தபட்சம் இலக்கை நெருங்கி இருக்க முடியும். இந்த இடத்தில் தவான் என்ன செய்ய வேண்டும் என்று கணக்கீடு செய்து, எப்போது என்ன செய்யலாம் என்கிற மனநிலையில் இருந்திருக்க வேண்டும். அவரது கேப்டன்ஷிப் சரியாக எடுபடவில்லை.” என்றார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement