
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று முதல் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் தலா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்று அசத்தியது.
இத்தொடரில் இந்திய பௌலர்களில் அக்சர் படேலை தவிர வேறு யாரும் சிறப்பாக செயல்படவில்லை. பும்ரா, புவி, ஹர்ஷல் படேல், சஹல் என அனைவரும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பினார்கள். இதில் சஹலின் பந்துவீச்சுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. முழுக்க முழுக்க பந்துவீச்சிற்காக மட்டுமே இவர் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 15ஆவது சீசனில் அபாரமாக பந்துவீசியதால்தான் மீண்டும் இந்திய அணியில் ரெகுலராக இடம்பெற்று வருகிறார். இந்நிலையில் சஹல் சமீப காலமாகவே சிறப்பாக செயல்படாததால் மிடில் ஓவர்களில் இந்திய அணி விக்கெட்களை வீழ்த்த தடுமாறி வருகிறது. சஹல் ஓவர்களில் சுலபமாக ரன்கள் கசிகிறது.