Advertisement
Advertisement
Advertisement

நடுவர்கள் சொல்வதே இறுதியானது - சதாப் கான்; ரசிகர்கள் சாடல்!

டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர்கள் செய்த மெகா தவறு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 06, 2022 • 15:25 PM
Shadab Khan breaks silence on Shakib Al Hasan's controversial dismissal in virtual quarter-final at
Shadab Khan breaks silence on Shakib Al Hasan's controversial dismissal in virtual quarter-final at (Image Source: Google)
Advertisement

சூப்பர் 12 சுற்றில் கடைசி நாளான இன்று நெதர்லாந்திடம் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது. இதனால் தென்னாப்பிரிக்க அணி தொடரை விட்டு வெளியேறியதால் பாகிஸ்தான் வங்கதேசம் அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு செல்லும் என நிலைமை மாறியது.

இந்த நிலையில் பெரிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆட்டத்தில் ஒரு சிறிய தவறு நடந்தாலே ஆட்டத்தின் போக்கே மாற்றிவிடும். நிலைமை அப்படி இருக்க நடுவர் செய்த மெகா தவறால் வங்கதேசத்தின் தலைவிதியே மாற்றிவிட்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி தொடக்க வீரர் நஜிமுல் சாண்டோ 54 ரன்கள் எடுத்தார்.

Trending


வங்கதேச அணி 73 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்த நிலையில் ஷகிப் அல் ஹசன் களத்துக்கு வந்தார். அப்போது ஷதாப்கான் வீசிய பந்தில் அவர் எல்பிடபிள்யூ ஆனார். எனினும் இது ரீப்ளேவில் நாட் அவுட் என தெரிந்தது. ஆனால் நடுவர் இதற்கு அவுட் கொடுத்து விட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே இந்தியா விளையாடிய போட்டிகளில் நடுவர்கள் செய்த தவறுக்கு ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக ஆஃப்ரிடி போன்ற வீரர்களே குற்றஞ்சாட்டினர்.

ஆனால் தற்போது நடுவர் செய்த தவறுக்கு பாகிஸ்தான் வீரர்கள் ஆதரவாக பேசி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. ஷகிப் அல் ஹசன் விக்கெட்டை வீழ்த்திய ஷதாப்கானிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அப்போது பேசிய அவர், “இந்த ஆட்டத்தில் இதுவரை நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். பந்துவீச்சாளர்கள் தங்களுடைய பணியை சிறப்பாக செய்திருக்கிறோம். ஆடுகளத்தில் உள்ள சூழல் எவ்வாறு இருக்கிறது என்பதை கணித்து நாங்கள் விளையாடினோம். ஷகிப் அல் ஹசன் விவகாரத்தில் நடுவர்கள் அவுட் கொடுத்து விட்டனர். நடுவர்கள் அவுட் என்று சொன்னால் நீங்கள் வெளியேறிவிட வேண்டும். நடுவர்கள் சொல்வதே இறுதியானது” என்று  கூறியிருக்கிறார்.

இந்த பேச்சுக்கு இந்திய ரசிகர்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர்கள் நோ-பால் வழங்கிய போது மட்டும் ஏன் பாகிஸ்தான் வீரர்கள் நடுவரிடம் போய் முறையிட்டனர் என்று கேள்வி எழுப்பினர். இதேபோன்று வங்கதேச ரசிகர்களும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை கடுமையாக விமர்சித்து ஏமாற்றி வெற்றி பெறுவதாக ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement