
ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் செய்த பாகிஸ்தான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் பெரும்பாலான வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்மான் 49 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, குல்தீப், ஜடேஜா, பாண்டியா சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 192 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 86, ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர்.
அதன் காரணமாக 1992 முதல் இதுவரை உலகக்கோப்பை சந்தித்த 8ஆவது போட்டியில் பாகிஸ்தானை தொடர்ச்சியாக தோற்கடித்த இந்தியா தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தக்க வைத்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. முன்னதாக இந்த போட்டியில் 2017, 2021 ஐசிசி தொடர்களைப் போல உலகக் கோப்பையில் தோற்று வரும் வரலாற்றை மாற்றி எழுதுவோம் என்று கேப்டன் பாபர் அசாம் தெரிவித்திருந்தார்.