
2019ஆம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் சதமடித்த கோலி அதன்பிறகு 1000 நாட்களை கடந்தப் பிறகும் சதமடிக்காமல் இருந்து வந்தார். இதனால், ஆசியக் கோப்பை 2022 தொடரில் கோலி தன்னை நிரூபித்தால் மட்டுமே அடுத்து டி20 உலகக் கோப்பை தொடரில் சேர்க்கப்படுவார் என தகவல் வெளியானது. இதனால், ஆசியக் கோப்பையில் கோலி மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்து காணப்பட்டன.
இந்நிலையில் கோலி முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், அடுத்து ஹாங்ஹாங் அணிக்கு எதிராகவும் அரை சதங்களை விளாசி அசத்தினார். அடுத்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி சதடித்து, ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கோலி சதமடித்ததால் ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் பலர் கோலியை பாராட்டி பேட்டி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி, கோலி உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு அறிவித்துவிட்டால் நல்லது என அறிவுரை வழங்கியுள்ளார்.