
பாகிஸ்தானில் வருகிற 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்குப் பிறகு தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வு முடிவை அறிவிப்பேன் என வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷாகிப் அல் ஹசன், “2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவேன். 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் ஓய்வு முடிவை அறிவிப்பேன். டெஸ்ட் போட்டிகளில் விரைவில் எனது ஓய்வை அறிவிப்பேன். நான் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஒன்றன்பின் ஒன்றாக ஓய்வு பெறுவேன்.
எனது ஓய்வு முடிவை 2025 ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பை தொடருக்குப் பிறகு அறிவிப்பேன். இந்த உலகக் கோப்பை தொடர் வரை மட்டுமே நான் வங்கதேச அணியின் கேப்டனாக செயல்படுவேன். அதன்பின் கேப்டன் பொறுப்பில் இருக்க மாட்டேன். இந்த தருணத்தில் எனது கேப்டன்சி எனது ஆட்டத்துக்கு மதிப்பு சேர்ப்பதாக நான் நினைக்கவில்லை. நான் அணிக்காக 10 ஓவர்கள் வீச வேண்டும்.