-mdl.jpg)
ஆசியக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெறும் அணிதான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் மெஹிதி ஹாசன் மிரஜ் 38 26, மிடில் வரிசையில் அஃபிஃப் ஹொசைன் 39, மஹ்முதுல்லா 27, மொசடெக் ஹோசைன் 24ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், அந்த அணி 20 ஓவர்களில் 183/7 ரன்களை குவித்தது.
அதன்பின் இலக்கை துரத்திய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் பதும் நிஷங்கா 20, குஷல் மெண்டிஸ் 60 ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். அடுத்து கேப்டன் ஷனகா 45 கடைசி நேரத்தில் பெரிய ஸ்கோர் அடித்தார். இறுதியில் 2 ஓவர்களுக்கு 27 ரன்கள் தேவைப்பட்டபோது எபாட் ஹோசைனின் 19ஆவது ஓவரில் 17 ரன்கள் சென்றது.