
சவுதாம்டனில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷில் இறுதிப் போட்டியில் முதல்நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. 2 ஆவது நாளில், டாஸ் வென்ற நியுசிலாந்து அணி இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா, சுப்மான் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்தனர்.
ரோகித் ஷர்மா 34 ரன்களிலும், சுப்மான் கில் 28 ரன்களிலும் அடுத்தடுத்த விக்கெட்டை இழந்தனர். புஜாரா 8 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அதன் பின் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி, துணைக்கேப்டன் ரஹானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
இதற்கிடையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் தேநீர் இடைவேளையுடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. நாளின் இறுதியில் கேப்டன் விராட் கோலி 44 ரன்களுடனும், அஜிங்க்ய ரஹானே 29 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இதனால் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களைச் சேர்த்துள்ளது.