
இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் மிக முக்கியமானவராக இருந்து வந்தவர் மகேந்திர சிங் தோனி. கேப்டன் பொறுப்பில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் பல சாதனைகள் படைத்திருக்கிறார். ஆரம்ப காலங்களில் முதல் நான்கு இடங்களுக்குள் பேட்டிங் செய்து வந்த தோனி, கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு பினிஷர் ஆக செயல்பட்டு வந்தார்.டாப் 4 பேட்ஸ்மேன் ஆக இருந்து வந்த போதும், பினிஷிங் ரோலில் விளையாடிய போதும் வெற்றிகரமாகவே திகழ்ந்திருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளிலும் பல வருடங்களாக இந்த ஃபினிஷிங் ரோலை வெற்றிகரமாக செய்து வந்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி. 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். வெற்றிகரமான கேப்டனாகவும் பினிஷர் ஆகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் 2018 -2020 ஆண்டுகளில் சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் தோனி குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். தோனி எப்படி இவ்வளவு வெற்றிகரமான ஃபினிஷராக இருக்கிறார்? அவரிடம் எந்த வித்தியாசமான பழக்கம் இந்த வெற்றிக்கு காரணம்? என்பது குறித்து பேசியுள்ளார்.