
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆசியக் கோப்பை டி20 போட்டி பற்றி ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறுகையில், “முதல் ஆட்டம் மிகவும் முக்கியமானது. இந்தியாவை வீழ்த்தி விட முடியும் என்கிற முழு நம்பிக்கையில் உள்ளார்கள் பாகிஸ்தான் வீரர்கள். எனவே இந்தியா - பாகிஸ்தான் இடையிலான முதல் ஆட்டத்தை வெல்பவர்கள் ஆசியக் கோப்பையையும் வெல்வார்கள்.