
ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 349 ரன்கள் அடித்தது. இரட்டை சதம் அடித்து வரலாறு படைத்த ஷுப்மன் கில், 149 பந்துகளில் 19 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் உட்பட 208 ரன்கள் அடித்தார்.
அதன்பின், 350 ரன்கள் என்கிற இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சான்ட்னர் மற்றும் ப்ரேஸ்வெல் இருவரும் ஜோடி சேர்ந்து 7ஆவது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தனர். சான்ட்னர் 57 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர், 57 பந்துகளில் சதம் விளாசிய பிரேஸ்வெல், போட்டியின் கடைசி ஓவர் வரை போராடினார். 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூசிலாந்து அணிக்கு, கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய ஷர்துல் தாக்கூரை, பேய் பார்மில் இருந்த ப்ரேஸ்வெல் எதிர்கொண்டு முதல் பந்தை சிக்ஸர் அடித்தார். பதட்டத்தில் இருந்த தாக்கூர், இரண்டாவது பந்தை ஒயிடாக வீசினார்.