
Shaun Pollock names 3 players CSK can retain ahead of IPL 2022 auction (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த 14ஆவது ஐபிஎல் தொடரில் சென்னை அணி 4ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இதை தொடர்ந்து அடுத்த வருடம் 15ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாட இருப்பதால் அந்த தொடருக்கு முன் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்கள் மெகா ஏலத்தில் விடப்பட இருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி ஒரு அணியில் மூன்று வீரர்கள் மட்டுமே தக்க வைக்கமுடியும் என்ற நிலையும் ஏற்படலாம். இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைக்கப் படவேண்டிய வீரர்கள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது/
இந்நிலையில் சிஎஸ்கே அணியில் எந்த 3 வீரரை தக்க வைக்கலாம் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ஷான் பொல்லாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.