
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான கால அளவே உள்ள நிலையில் இந்திய அணி தங்கள் 15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை தேர்வு செய்வதற்கு தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது . இந்திய அணியை பொறுத்த வரை பெரும்பாலான வீரர்கள் முதல் தரத் தேர்வாக இருந்தாலும் நான்காவது இடத்தில் விளையாடக்கூடிய வீரர் யார் என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது .
இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டியில் நான்காவது வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி வந்தார் . உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் நான்காவது இடத்தில் இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயம் காரணமாக வெளியேறியவர் தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்தக் காலத்தில் இருந்து குணமடைந்து வருகிறார் .
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் இந்திய அணிக்கு சிறந்த நடுவரிசை ஆட்டக்காரர்களாக கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் . மேலும் அனுபவ வீரர்கள் அனைவரும் நடு வரிசையில் களமிறங்கி விளையாடுவது இந்தியா அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் உலகக் கோப்பை கால இந்திய அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் நிலவுகிறது .