
ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு அனைத்து கிரிக்கெட் அணிகளும் தயாராகும் நடைபெற்று வரும் பயிற்சி போட்டிகளில் அனைத்து அணியினரும் விளையாடிவருகின்றனர். இதில் இன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 48, மார்னஸ் லபுஷாக்னே 40, கிளன் மேக்ஸ்வெல் 77, கேமரூன் கிரீன் 50, ஜோஷ் இங்லீஷ் 48 ரன்கள் ரன்களைஒ எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக உஷாமா மிர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக இந்த போட்டியில் ஹரிஷ் ரவூப் வீசிய 23ஆவது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஸ்டீவ் ஸ்மித் லெக் சைட் திசையில் லேசாக தட்டி விட்டு இரண்டு ரன் எடுக்க ஓடினார். அப்போது அதை இருபுறங்களிலும் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் முகமது நவாஸ் மற்றும் இமாத் வாசிம் ஆகியோர் தடுப்பதற்காக வேகமாக ஓடி வந்தனர்.