Advertisement

Shivam Dube Century: ரஞ்சி கோப்பையில் சதமடித்து மிரட்டிய ஷிவம் தூபே!

அஸாம் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வரும் ஷிவம் தூபே சதமடித்து அசத்தியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 17, 2024 • 19:26 PM
Shivam Dube Century: ரஞ்சி கோப்பையில் சதமடித்து மிரட்டிய ஷிவம் தூபே!
Shivam Dube Century: ரஞ்சி கோப்பையில் சதமடித்து மிரட்டிய ஷிவம் தூபே! (Image Source: Google)
Advertisement

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்  எலைட் குரூப் பி பிரிவுக்கான ஆட்டம் ஒன்றி மும்பை மற்றும் அசாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  அதன்படி களமிறங்கிய அசாம் அணி வீரர்கள் ஷர்துல் தாக்கூரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் தாக்கூரி 31 ரன்களைச் சேர்த்ததை தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதிலும் குறிப்பாக அந்த அணியின் 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 32.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துடன், வெறும் 84 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 10.1 ஓவர்களை வீசியதுடன் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Trending


இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியில் லல்வானி ரன்கள் ஏதுமின்றியும், பிரித்வி ஷா 30 ரன்களிலும், ஹர்திக் தோமர் 22 ரன்களிலும், சூர்யான்ஷ் ரன்கள் ஏதுமின்றியும், அஜிங்கியா ரஹானே 22 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய ஷிவம் தூபே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் தூபே தனது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார், இப்போட்டியில் 11 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 121 ரன்களைச் சேர்த்த ஷிவம் தூபே இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் மும்பை அணி 272 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. மும்பை அணியின் மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவற ஷிவம் தூபே சதமடித்து அசத்தியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பாண்டு நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் தூபே தற்போது ரஞ்சி கோப்பை தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் சென்னை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் வெற்றி நாயகனாகத் திகழ்ந்த ஷிவம் தூபே நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement