Advertisement

சுரேஷ் ரெய்னா கூறுவதையும் கொஞ்சம் கேளுங்கள்; தோனிக்கு கோரிக்கை வைத்த ஷிவம் தூபே!

இந்திய அணிக்காக ஷிவம் தூபே பந்துவீசுவதை சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பார்த்திருந்தால், அடுத்த ஐபிஎல் சீசனில் 3 ஓவர்களை ஒதுக்கிவிடுவார் என்று சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 12, 2024 • 14:25 PM
சுரேஷ் ரெய்னா கூறுவதையும் கொஞ்சம் கேளுங்கள்; தோனிக்கு கோரிக்கை வைத்த ஷிவம் தூபே!
சுரேஷ் ரெய்னா கூறுவதையும் கொஞ்சம் கேளுங்கள்; தோனிக்கு கோரிக்கை வைத்த ஷிவம் தூபே! (Image Source: Google)
Advertisement

இந்தியா- ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆட்டத்தின் 2ஆவது பந்திலேயே ரோஹித் சர்மா ரன்அவுட் ஆனார்.  அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில் 23 ரன்களுக்கு, திலக் வர்மா 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய ஷிவம் தூபே ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் ஜிதேஷ் சர்மா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் தூபே 38 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இதன்மூலம் இந்திய அணி 17.3 ஓவரில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தனை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Trending


தொடர்ந்து பேட்டிங்கில் கடைசி வரை களத்தில் இருந்த ஷிவம் தூபே 40 பந்துகளில் 60 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். ஷிவம் தூபே ஆல்ரவுண்டராக முன்னேற்றம் கண்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டிக்கு பின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் ஷிவம் தூபே தொலைக்காட்சியில் பேசினார்.

அப்போது சுரேஷ் ரெய்னா, இந்த போட்டியை சிஎஸ்கே கேப்டன் தோனி பார்த்திருந்தால், அடுத்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் 3 ஓவர்கள் உனக்கு தான் என்று கூறினார். அதற்கு ஷிவம் தூபே, தோனி.. சுரேஷ் ரெய்னா சொல்வதை கொஞ்சம் கேளுங்கள் என்று சிரித்து கொண்டே கூறினார். இந்த உரையாடல் சிஎஸ்கே வீரர்களுக்கே உரிய கேலியும், கிண்டலுடனும் அமைந்தது.

கடந்த சீசனில் பேட்டிங்கில் அசத்திலும், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ஷிவம் தூபேவுக்கு ஒருமுறை கூட பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை. அதன்பின் ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் அலி உள்ளிட்ட தொடர்களில் ஷிவம் தூபே பவுலிங் செய்து பயிற்சி மேற்கொண்டதன் விளைவே தற்போது விக்கெட் வீழ்த்த காரணமாக அமைந்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement