 
                                                    
                                                        Shoaib Akhtar Criticize Pakistan Cricket team after win the first t20 against England (Image Source: Google)                                                    
                                                இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆன பாகிஸ்தான் அணி, டி20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.
பாகிஸ்தான் அணி டி20 போட்டியில் நன்றாக ஆடி வெற்றி பெற்றாலும், அந்த அணி நிர்வாகத்தின் செயல்பாடு, வீரர்களின் ஆட்டம், ஃபிட்னெஸ் என எந்தவிதத்திலும் பாகிஸ்தான் அணி மீது நல்ல அபிப்ராயம் இல்லாத அக்தர், பாகிஸ்தான் அணி குறித்த நிதர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அக்தர்,“பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் நன்றாக விளையாடுகிறது. ஆனால் அதுதான் அந்த அணியின் பிரச்னையும் கூட. ஏனெனில், டி20 போட்டியை போலவே ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி 50 ஓவர்கள் முழுமையாக ஆடாமல் ஆல் அவுட்டாகிறது. அதுதான் அந்த அணியின் பிரச்னையாக உள்ளது.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        